இடுகைகள்

கருவேலன் மரம்

படம்
கருவேல மரம்  கிராமங்களில் இன்னும் சுருக்கமாக கருவ மரம்,, கருக மரம் ,, குடை மரம், என்று சொல்வார்கள்,, கரு என்றால் குழந்தை கரு வேலன் என்றால் வேல் ஏந்திய முருகன், முருகன்,,,செவ்வாய் பகவானின் அம்சம் கரு வேலன்  வேலன்- முருகன் -செவ்வாய் பகவான் இன் அதி தேவதை முருகன் ஆவார்,, செவ்வாய் ஜோதிடத்தில் வீரிய காரகன் எனப்படுவார்,, திருமணத்திற்கு தாம்பத்ய திறனை கணக்கிட செவ்வாய் எவ்வளவு முக்கியம் என்பது யாவரும் அறிவோம்  இந்த கருவேல மரத்தில் கூர்மையான பெரிய பெரிய முட்கள் கொண்டவையாக இருக்கும் கூர்மை யான ஆயுதம் போல இது செவ்வாய் காரகத்தை சுட்டி காட்டுகிறது,, இந்த மர இலைகளை ஆடுகள் விரும்பி உண்ணும்,,, ஆடு செவ்வாய் பகவானின் வாகனம் ஆகும்,,  திருமணத்திற்கு மறுநாள் சம்பந்தி விருந்து நடக்கும்  அதில் ஆட்டு இறைச்சி காலம் காலமாக இடம் பெற்று வருகிறது,, என்பது குறிப்பிடத்தக்கது,,  திருமணத்திற்கு இரு வீட்டார் முற்றத்திலும் ,, தென்னை ஓலை பந்தல் இடுவார்கள் தென்னை குரு காரகம்,,  அதற்கு அடுத்த படியாக வெள்ளை துணி பந்தல் இடுவர்கள் ,, வெள்ளை துணி சுக்ரன் காரகம்,, திருமணத்திற்கு குரு சுக்ரன் எவ்...

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் ..... !!!

🌹 பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் ..... !!! 🌹  1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. 2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள். 3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். 4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன். 5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான். 6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம். 7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. 8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப்...

முனிவர் தனே

#அட்டமாசித்தி என்றால் என்ன? அட்டாங்க யோகப் பயிற்சிகள் அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சிகளால் பெற்றனர். அத்தகைய சித்திக ளை த் திருமந்திரம் விளக்குகிறது. அட்டாங்க யோகப் பயிற்சிகள் 1. அணிமா 2. மஹிமா 3. லஹிமா 4. கரிமா 5. பிராத்தி 6. பிரகாமியம் 7. ஈசத்துவம் 8. வசித்துவம் “ அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம்,அவற்றின் அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா, திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா, சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி, பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை பிரகாமி,ஈசிதை மாவலியும் அடி பேணி மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே!” 1. #அணிமா: பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது. பிருங்கி முனிவ ர் முத்தேவர்களைமட்டும் வலம் வருவதற்கா க சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும். 2. #மஹிமா: ...

பலாப்பழம்

படம்
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் நினைத்தாலே சாப்பிடத் தோன்றக்கூடிய சுவை உடையது. பலாப்பழத்தின் சுவை மேலும் மேலும் சாப்பிடத் தூண்டும். பலாப்பழத்தில் சில மருத்துவ நன்மைகள் இருந்தாலும்,சில தீமையும் உள்ளது . 1.பலாப் பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டு வர மூளை நரம்புகள் வலுப்பெறும். வாத நோய் போன்றவை குணமாகும் . 2.பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூசி வர குணமாகும். 3.இது உடல் உஷ்ணத்தை குறைத்து, பித்த மயக்கம், ஆகியவற்றை குணமாக்கும். பலாப்பழத்தை  ஏன்  அதிகமாக சாப்பிடக்கூடாது 1.இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். 2.பலா பிஞ்சினை அதிகமாய் உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும். 3.குடல் வால் சுழற்சி எனப்படும் “அப்பன்டிசைடிஸ்” உள்ளவர்கள் பலாப் பழத்தை அறவே சாப்பிடக் கூடாது

அரச மரம் (ARASA MARAM)

படம்
கூரிய இலைகளையுடைய பெருமரம் அரசமரம். எரி, குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது. கொழுந்து, பட்டை, வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. 1. துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும். 2. வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச்சூடு, சொறி, சிரங்கு, தினவு, நீர் எரிச்சல், ஆகியவை தீரும். 3. மரப்பட்டைத் தூளைக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் புண், சொறிகளுக்குப் பூசக் குணமாகும். 4. மரப்பட்டைத் தூள் 2 சிட்டிகை நீரில் ஊறவைத்து வடிகட்டிக் குடிக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும். 5. அரசு விதைத் தூள் உயிரணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டினை நீக்கும். 6. அரசங்கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியன தீரும். 7. உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாட்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும். 8. கொழுந்து வெப்பகற்றித் தாகந்தணிப்பானாகவும், விதை காமம் பெருக்கியாகவும், வேர், பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும்.

முன்னுரை

எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்